13ஆம் ஆண்டில் இணையத்தில் தடம் பதித்து கொண்டிருக்கிறோம்... 2011-2022
இத்தருணத்தில் எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.!!!
ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
|
'குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராகக் கருதப்படும் மொஹமட் இப்ராஹிம் பாரிய வணிகர் ஆவார். அவருடன் ரிஷாட் பதியுதினின் தம்பி இணைந்து வணிக நடவடிக்கைககள் பலவற்றை முன்னெடுத்துள்ளார். முன்னான் ஜனாதிபதி சந்திரிகா மீதான குண்டு தாக்குதல் முயற்சியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரொருவர் இவரது உறவினராவார்.
அத்தோடு மன்னார் பிரதேசத்தில் சுமார் 3000 ஏக்கர் காணி ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது உறவினர்கள் பலரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, பள்ளிவாசல்களை புனரமைப்பதற்கு வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதி கொள்ளையிடப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் மீது முறைப்பாடுகள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
|
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.