
அந்தவகையில் வடக்கில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை யாழ்.மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச செயலகத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் அலுவலகத்தை சம்பிரதாய பூர்வமாக இன்று திறந்து வைத்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,
முன்னைய காலங்களில் பிறப்பு இறப்புச் சான்றிதழ்கள் பெறும் நடவடிக்கைகள் யாழ்.மாவட்ட செயலகத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வந்தன. படிப்படியாக அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதன் பின்னர் பிரதேச செயலகங்களுக்கு அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
அதன்படி அவர்கள் அந்தந்த பிரதேச செயலகத்திற்குரிய பிரதேசங்களில் பிறந்தவர்கள் அந்தந்தப் பிரதேசங்களில் பிறப்பு, இறப்பு மற்றும் பதிவுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன் பின்னர், யாழ்.மாவட்டத்தினுடைய பிரசேங்களில் பிறந்தவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களையும் பெறக்கூடியதாக இருக்கும்.
வடமாகாணத்தில் பிறந்தவர்கள் வடக்கில் எந்தப் பிரதேச செயலகத்திலும் பெறக்கூடிய ஏற்பாடுகள் முன்னரே இருந்திருந்தாலும், தற்போது, அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதன் அடிப்படையில், நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், யாழ்.மாவட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் குறித்த செயற்திட்டம் எமது மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.