யாழில் அரசுக்கு ஆதரவாகக் கோசமிட்டவர்களுக்குச் செருப்படி..! - Yazhpanam.Com - எமது உணர்வு! எமது உரிமை!
Yazhpanam(Jaffna)

Post Top Ad

Your Ad Spot

Live TV:

"https://cdn.jwplayer.com/videos/LNdcgulf-hpRdFTM9.m3u8"
11ஆம் ஆண்டில் இணையத்தில் தடம் பதித்து கொண்டிருக்கிறோம்... 2011-2022
இத்தருணத்தில் எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.!!!

Tamil Web Radio(FM)

SOORIYAN.TV

Friday, April 1, 2022

யாழில் அரசுக்கு ஆதரவாகக் கோசமிட்டவர்களுக்குச் செருப்படி..!

யாழ்.நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுங்கைப்பில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில்,

அதனை குழப்பும் வகையில் அரசுக்கு ஆதரவாக கோசங்களை எழுப்பி போராட்டம் நடத்தியோர் மீது செருப்படி விழுந்துள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு ஐனாதிபதிக்கு ஆதரவாக  ஒரு குழு செயற்படவே அங்கு முறுகல் நிலை உருவானது.

முறுகல் நிலை ஏற்பட்டதுடன் கைகலப்பும் ஏற்பட்டு அரசுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியவர் மீது செருப்படியும் விழுந்துள்ளது இந்நிலையில் பதற்றத்தை தணிப்பதற்காக பொலிஸார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் சிலர் காயமடைந்தனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் கட்சியினர் தொடர்ந்தும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உமாச் சந்திர பிரகாஷ் உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

NJ News

BBC Tamil News World


Copyright © 2011 - 2021 Yazhpanam.Com. All rights reserved. Privacy Policy

Post Top Ad

Your Ad Spot